முல்லைத்தீவு நித்தகைக்குளம் உடைப்பெடுத்தது ; அறுவர் உலங்கு வானூர்தியில் மீட்பு

முல்லைத்தீவு – நித்தகைக்குளம் உடைப்பெடுத்தமையால் வௌ்ளத்தில் சிக்குண்ட 6 பேர் விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் முல்லைத்தீவிலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பலத்த மழை காரணமாக குமிழமுனைக்கு அண்மித்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்துள்ளது. இதனால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக, விசேட தேவையுடைய ஒருவர் உள்ளிட்ட 6 பேர் அப்பகுதியிலிருந்து வௌியேற முடியாத நிலையில் 2 நாட்களாக தங்கியிருந்ததனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் 6 பேரும் மீட்கப்பட்டு இடர் … Continue reading முல்லைத்தீவு நித்தகைக்குளம் உடைப்பெடுத்தது ; அறுவர் உலங்கு வானூர்தியில் மீட்பு